
இதுவரை உங்களை பற்றி எழுதவில்லை என்று எண்ணாதீர்கள் எம் தந்தையே
எல்லாம் எழுதும் எம் பேனா உங்களை பற்றி எழுதாமல் போய்விடுமா...!
உங்களை பற்றி எழுதும் தருணத்தில் எம் பேனாவின் முனையில்..!
சிறு அழுத்தம் ஏற்பட்டால் அது உங்கள் பாதம் தைத்த முள்ளாய்...!
என்உள்ளத்தை உதிர்ந்த மரமாகியிருக்கும்
எனவே
இதுவரை எம் பேனா உங்களின் பெருமைகளை ருசித்து ரசிக்காமல் இருந்தது...!
உம்மைப்பற்றி எழுதும் இந்த தருணத்தில்
என்னை
அறியாமல் எம் கண்ணில் தேங்கிநிற்கும் நீரை
இந்த காகிதம் கூட அறிந்திருக்காது...!
எமக்காக எத்தனை எத்தனை கஷ்டங்களை அனுபவித்தீர்! உலகிற்கு உயிர் கொடுத்து அறிமுகம் செய்ததில் இருந்து இன்றுவரை...!
கல்வெட்டில் செதுக்கினால் கூட முடிவு பெறாது எமக்காக நீ பெற்ற கஷ்டங்கள்..!
மாறாத உண்மைகளுக்கு மத்தியில் வந்து வந்து போகின்றன உங்களின் உவமைகள் மட்டுமே...!
எம் பாதம் சுமந்து நடை பழகி தந்த உங்கள் பாதங்களுக்கு எம் முதல் வணக்கம்!
எம் விரல் பிடித்து உங்கள் உயிர் எழுத்தை எழுத வாய்த்த உங்கள் தமிழுக்கு எம் வணக்கம்...!
என்னை பள்ளிக்கூடத்துக்கு சுமந்து சென்ற உங்கள் தோள்களுக்கு எம் வணக்கங்கள்...!
தோழனுக்கு தோழனாக இருந்து உங்கள் வாழ்கை அனைத்தையும் எமக்காக அர்ப்பணம் செய்யும் உங்கள் வாழ்க்கைக்கு எம் எம் வணக்கங்கள்...!
மனிதனுக்கு மாண்பும்,
மாணவனுக்குபண்பும்,
தலைவனுக்கு தன்னம்பிக்கையும்,
கணவனுக்கு கண்ணியமும்,
இறைவனுக்கு ஈகையும்,
எவை எல்லாமுமாக, நீங்களும்....அப்பா
உங்களின் பாதம் பட்ட இடமெல்லாம்
என் கண்ணீர் துளிகள்! பனித்துளிகளாய்!
என்றும் உறைந்திருக்கும் ..!
எத்தனை தவம் செய்தாலும்இனி நான் எப்படி அழைப்பேன்
அப்பா என்ற மந்திரசொல்லை...!
காலம் உங்களை கரை சேர்த்திற்று..!
எம் கண்கள் இங்கே குளமாயிற்று...!
கார்த்திக் நெல்லை
No comments:
Post a Comment