இந்த கரிசல் காட்டு பூக்கள் மட்டும் என்ன விதிவிலக்கா...
இதற்கும் வாசங்கள் உண்டென்பதை நம் மனம் ஏற்றுக்கொள்ளாது
போவதேன்..!
இவை நெருப்பை சுவாசித்து சேரை உறிஞ்சி வளர்கின்றன ..!
இவற்றிற்கு யாரும் காலை, மாலை, நீருற்றி போவதில்லை ..
பட்டம் பார்த்து உரமேற்ற யாருமில்லை .... கானல் நீர்தான்..
இவற்றின் காலை உணவானதோ...
அந்திக்குள் அதன் வாழ்கை அடங்கி போவதானால் அதன்
ஆசைகள் முடங்கி போகுதல் நியாயம் இல்லை ..
இவை பூஜைக்கு ஏறும் காலம் மட்டும் என் போர்குரல்
என்றும் ஒலித்திருக்கும்...
ஒ...ஆதவச்செம்மலே ..நீ அள்ளி விடும் அனல்காற்றை..
வர்க்கம் பாராது வாழ்வில் சேர்கும்போது... வலியார் எளியார்
பேதைமை வருவது ஏது...
நிலைகொள்ளாபூமியும் அலை கொள்ளா ஆழியும் ...
அழிந்தேதான் போகாது இவள் தன் பெண்மை
கரிசல் பூக்களாய் கேட்பாரற்று போகுமோ ...
_ கார்த்திக் ராஜா (நெல்லை)
இதற்கும் வாசங்கள் உண்டென்பதை நம் மனம் ஏற்றுக்கொள்ளாது
போவதேன்..!
இவை நெருப்பை சுவாசித்து சேரை உறிஞ்சி வளர்கின்றன ..!
இவற்றிற்கு யாரும் காலை, மாலை, நீருற்றி போவதில்லை ..
பட்டம் பார்த்து உரமேற்ற யாருமில்லை .... கானல் நீர்தான்..
இவற்றின் காலை உணவானதோ...
அந்திக்குள் அதன் வாழ்கை அடங்கி போவதானால் அதன்
ஆசைகள் முடங்கி போகுதல் நியாயம் இல்லை ..
இவை பூஜைக்கு ஏறும் காலம் மட்டும் என் போர்குரல்
என்றும் ஒலித்திருக்கும்...
ஒ...ஆதவச்செம்மலே ..நீ அள்ளி விடும் அனல்காற்றை..
வர்க்கம் பாராது வாழ்வில் சேர்கும்போது... வலியார் எளியார்
பேதைமை வருவது ஏது...
நிலைகொள்ளாபூமியும் அலை கொள்ளா ஆழியும் ...
அழிந்தேதான் போகாது இவள் தன் பெண்மை
கரிசல் பூக்களாய் கேட்பாரற்று போகுமோ ...
_ கார்த்திக் ராஜா (நெல்லை)

No comments:
Post a Comment