About Me

My photo
ulagam romba chinnathu so we r going do deside fly or die .. iam chose to fly..cool

Thursday, 10 June 2010

பால்யங்களில் பழகியவை ...

எத்தனை முறை அப்பா அடித்தாலும் விளையாடசெல்லும் மாந்தோப்பு ....
எட்டிபிடித்தபடி ஊஞ்சலாடும் ஆலமரம் ...
சுட்டு தின்ன எடுக்கும் துக்கனாங்குருவி முட்டை....
நீந்திகரையேறும் பாளையத்து ஆற்றங்கரை ...
கண் கட்டி விளையாடும் செம்மண் தரட்டு வளை...
எச்சில்தடம் பதித்து ஆச்சி தரும் அன்பு முத்தம்...
தெருவெல்லாம் தடம் பதிக்கும் சைக்கிள்டயர் பந்தயங்கள்...
துண்டில் சிக்கி விடும் தவளைகளின் தப்பாட்டம்...
இரும்பை காந்தமாகக ரயில் பாதை காத்திருப்பு..
தோழிகளை கவர்வதற்காய் தினம் பிரக்கும் மயில் தோகை...
களிமண் கைப்பொருளாய் நான் செய்த குரலி பொம்மை..
வைக்கோல் படப்புகளில் சறுக்கி விழுந்த காயங்கள்...
கருப்பலகை காயவைக்க நான் படித்த காக்கை பாட்டு...
பொங்கல் கரும்புகளை வெட்டி தரும் பெரிய அருவா..
முதல் முதலாய்பள்ளிசெல்லும் கவலைகளின் குறுகுறுப்பு..
எத்தனை காலங்களிலும் அழியாத என் பால்யங்களில்..
பயணித்த அனுபவமும் ஒருசேர கிடைக்கிறது
அன்பு வைத்த ஆச்சியின் ஈமசடங்கின்...
ஈர விழியோர நாட்களில்...

கார்த்திக் ராஜா <நெல்லை>

No comments: