மழலை சந்தங்களின் சித்தாந்தம்மில்லா
சிரிப்புகளின் சந்துகளில் சிதறி கிடக்கிறது ..
மனிதர்களின் மனக் காயங்களின் மருந்துகள் ...
இறைவன் வர முடியாத இல்லத்திற்கு இளம்
பிஞ்சுகளை வரமாக கொடுத்திருக்கிறான்..
நாத்திகவாதிகளின் இல்லங்களின் சுவர்களில்
கூட கடவுள் வரையப்படுகிறான்.. மழலைகளின்..
கிறுக்கல்கள்...
கார்த்திக் ராஜா (நெல்லை)

No comments:
Post a Comment